அடைமழையில் அந்தர்பல்டி அடித்த நபர்..வைரலாகும் வீடியோ

சனி, 27 ஆகஸ்ட் 2022 (20:30 IST)
அடைமழையில் ஒரு நபர் அந்தர்பல்டி அடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தென்மேற்குப் பருவ மழை இந்தியாவில் பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் வட மா நிலங்களாக அசாம், இமாச்சல பிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மா நிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று அடைமழை பெய்த நிலையில் ஒரு நபர் மதுபோதையில், அந்த மழையில் நனைந்துகொண்டு சென்றார். அப்போது, மழையில் ஆட்டம் ஆடியபடி, அந்தர்பல்டி அடித்து எழுந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழையை ரசிக்காதவர்கள் யாரர் இருக்க முடியும் என்று   நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்குப் பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்