விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:39 IST)
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததையடுத்து காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர்
 
 தனது 16 வயது மகளை அந்த பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மகன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் புகார் அளித்தார் 
 
இந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து அவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்