ஏற்கனவே, அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை தினங்கள் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு நடுவில் வருகின்றன. அக்டோபர் 3-ம் தேதியும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து, அக்டோபர் 3-ம் தேதியையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழக அரசு இந்த விஷயத்தை கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.