தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இன்று இந்த முடிவுகளை வெளியிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி முதல் நடத்தப்படும். தேர்வு அட்டவணை நாளை, மே 17 அன்று வெளியிடப்படும்” என்றார்.