பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த தேர்வுகளை 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், இன்று இறுதி தேர்வாக சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்று வருகிறது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மதிப்பீடு செய்வார்கள். அதன் பின்னர் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.