நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அரசாணை

வியாழன், 27 ஜனவரி 2022 (18:35 IST)
நியாயவிலை கடைகளில் தற்போது அரிசி கோதுமை சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சிறுதானியங்களும் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது
 
முதல்கட்டமாக  சென்னை கோவை மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்யப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ராகி கம்பு தினை சாமை வரகு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
நியாயவிலை கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்