எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:35 IST)
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுர்வேதா, கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நாளை அதாவது எட்டாம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 தமிழகத்தில் ஏற்கனவே நீட் தேர்வின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகளுக்கு நாளை முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் நீட் தேர்வில் 108 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் நூத்தி முப்பத்தி எட்டு மதிப்பெண் எடுத்த பொதுப்பிரிவு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பங்களை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்