மதுரை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

புதன், 29 நவம்பர் 2023 (20:15 IST)
மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதியாக இருந்த நிலையில், நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகாள் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த   நிலையில், சிறை வளாகத் தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள்  செல்லுகையில் ஜெயக்குமார் மாயமாகிவிட்டார்.
 
அவர் அங்கு காணவில்லை என்பதால், போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்