ராமநாதபுரத்தில் பாதிரியாரின் காம வேட்டை: 30 பெண்கள் பலாத்காரம்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (16:12 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிரியார் ஒருவர் பெண்கள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. பாதிரியாரை கைது செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


 
 
நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங் இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் காந்திமதி என்ற பெண்ணிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி நகை பணங்களை வாங்கி ஏமாற்றியுள்ளார்.
 
பின்னர் ஒரு நாள் காந்திமதியை போனில் தொடர்புகொண்டு சங்கரன்கோவிலில் வேலை ஏற்பாடு செய்திருப்பதாக கூறி காரில் அழைத்துக்கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
 
இதனையடுத்து காந்திமதி காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் இதேப்போல் 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்ததையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்