தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. இடையே ஏற்பட்ட கூட்டணி முறிந்துவிட்டதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு சில செய்திகள் பரவின. அது தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.