ஜி.எஸ்.டி.யை இரண்டு அடுக்குகளாக மாற்றியமைத்த முடிவு, அத்தியாவசிய பொருட்கள், சுகாதாரம், விவசாய உள்ளீடுகள் மற்றும் காப்பீட்டுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை போன்றவை எளிமை, நியாயம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள், வரி இணக்கத்தை எளிதாக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.