"கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட தலைநகரம். அங்குள்ள பொன்னேரி ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் பாசனப் பரப்பு 1,374 ஏக்கர் உள்ளது. அங்குள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்த ஏரியை சுற்றுலாத் தளமாக மாற்ற ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம், குருவாயூர் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் பாசனத்திற்கும் இது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக இருக்கும்."
மேலும், "ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு மற்றும் கடல் கடந்த படையெடுப்பின் 1000வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தர உள்ளார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெரும் பெருமையாகும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது வருகையை பெருமை என்று குறிப்பிட்ட அரசியல் அரங்கில் விவாதத்தை எழுப்பியுள்ளது.