கட்டிட மேஸ்திரி ரிங்கு, தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பும்போது, மனைவி திட்டமிட்டபடி கள்ளக்காதலன் அஜித் அவரை சுட்டு கொன்றான். விபத்து நடந்ததுபோல மனைவி நாடகமாடினார்.
கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், மனைவி மீது சந்தேகம் கொண்ட ரிங்கு, அஜித்தை நேருக்கு நேர் சந்தித்து கடுமையான வாக்குவாதம் செய்து, பலமுறை அறைந்துள்ளார்.
கணவன், அஜித்தை தாக்கியதால் ஆத்திரமடைந்த அஜித், ரிங்குவின் மனைவியிடம், "கணவனா? அல்லது நானா? , யாரை தேர்ந்தெடுக்கிறாய்?" என மிரட்டியுள்ளான். காதலனை மனைவி தேர்ந்தெடுத்தவுடன் இந்த கொலை நடந்துள்ளது.
விசாரணையில் உண்மை தெரியவர, ரிங்குவின் மனைவியும், அஜித்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.