100 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் நிம்மதி!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்று 100 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று 99வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்று 100வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அண்டை நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தாலும் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்