பட்ஜெட்டிற்கும் பின்னரும் மாறாத பெட்ரோல், டீசல் விலை

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (07:42 IST)
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்த நிலையில் பல பொருட்களின் விலை குறையும் என்றும் சில பொருட்களின் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
அந்த வகையில் பட்ஜெட்டிற்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக 3 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்றும் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் ஐந்து மாநில தேர்தலுக்குப் பின்னர் உயரும் என்ற தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்