தக்காளி விலையைக் குறைப்பதற்கான மோடி பிரதமராகவில்லை- அமைச்சர் பாட்டில்

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:20 IST)
தக்காளி விலையைக் குறைப்பதற்கான மோடி பிரதமராகவில்லை என மத்திய இணை அமைச்சர் பாட்டில் தெரிவித்துள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாஜக அரசின் இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஜீரோ பட்ஜெட் என விமர்சித்திருந்தார். அதேபோல் எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  மத்திய  இணை அமைச்சர் பாட்டில், மட்டன் ஒரு கிலோ ரூ.700க்கும், பீட்சா ரூ.500க்கும் விற்பனை ஆகிறது. வெங்காயமும், தக்காளியும் ரூ.40 க்கு உயந்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையைக் குறைக்க அவர் பிரதமர் ஆகவில்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்