நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் மே 16 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இதனைமுன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை மே 10 ஆம் தேதி அன்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேள நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என கூறப்பட்டுள்ளது.