சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை அடுத்த இரு நாட்களில் விலகும் நிலையில், அக்டோபர் 16-ஆம் தேதி வாக்கில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
இன்று, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்படப் பல தென் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், நாளை முதல் அதாவது அக்டோபர் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை தொடரும்.