தமிழ்நாட்டில் இருந்து விடை பெற்றது கொரோனா.. ஒருவர் கூட பாதிப்பு இல்லை..!

செவ்வாய், 27 ஜூன் 2023 (07:42 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று ஒரு நபர் கூட கொரோனா வைரஸால் பாதிப்பு அடையல்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மூன்று ஆண்டுகளாக தமிழகம் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸ், தற்போது தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்றதாக தெரியவருகிறது 
 
நேற்று ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட்டு உள்ளது என்பது தெரிய வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்