கிருஷ்ணகிரி அருகே விபத்து: 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (15:20 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னாரில், கண்டெய்னர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி கொண்டதில் 7 பேர் பலி ஆகியுள்ளனர்.


 


கிருஷ்ணகிரியில் இருந்து, ஓசூர் நோக்கி 60 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தின் மீது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மேலும், 13 பேர் கவலை கிடமாக உள்ளனர், 20 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர். தீயணைப்பு படையினர் இவர்களை மீட்டு அவசர ஊர்தியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்