இன்று காலை 7 மணிக்கு, கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பொது தீட்சிதர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தேசியக் கொடியானது வெள்ளி தட்டில் வைக்கப்பட்டு, சித்சபையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. கோயில் செயலர் த. சிவசுந்தர தீட்சிதர் தலைமையில், பொது தீட்சிதர்கள் மேளதாளங்கள் முழங்க தேசியக்கொடியை எடுத்து வந்து, கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றினர்.