அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (07:40 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பண மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது நீதிமன்றக் காவல் 14 நாட்களுக்கு நீட்டிப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற  நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம்  செந்தில் பாலாஜி சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை அக்டோபர் 13 வரை காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற  நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்