அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு : அமைச்சர் பொன்முடி

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (10:40 IST)
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கலை அறிவியல் கல்லூரி தேர்வுகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ’அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்றும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு 20 லட்சத்து 875 மாணவர்கள் எழுத உள்ளனர் என்றும்  தெரிவித்துள்ளார் 
 
அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்