நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? ஈபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:31 IST)
அதிமுக அரசின் பத்தாண்டு சாதனை மற்றும் திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை ஆகியவற்றை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 தமிழகத்தில் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு அமைச்சர் மன சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அதிமுகவின் பத்தாண்டு கால சுகாதார துறையின் பணிகள் மற்றும் திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால சுகாதார பணிகள் ஆகியவற்றை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார். 
 
அண்டை மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக எப்படி இருந்தார் என்ற சந்தேகம் எழுதுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 
 
அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களின் சவாலை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி விவாதத்திற்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்