"குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தி கொன்று, பின்னர் காரை கால்வாயில் தள்ளி விபத்து போல காட்டியுள்ளா. சுனில் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை ஷீத்தல் சமீபத்தில் அறிந்ததால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஹரியானா இசைத் துறையில் பணிபுரிந்த ஷீத்தல், ஜூன் 14 அன்று காணாமல் போனார். இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மாட்லாவுடா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். ஷீத்தல் சுனிலுடன் காரில் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.