சனாதனத்தை உயிர்ப்பிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (15:25 IST)
சனாதனத்தை சாவு மணி அடித்தது இந்த மண் என்றும் இந்த மண்ணில் சனாதனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி அவர்கள் சனாதனம் குறித்து பேசினார். அவரது பேச்சு சர்ச்சைக்குரியது என்று பல அரசியல்வாதிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது சமாதானத்திற்கு சாவு மணி அடித்த மண் இந்த மண் என்றும் இந்த மண் குறித்து ஆளுநருக்கு தெரியாது என்றும் சனாதனத்தை உயிர்பிக்க ஆளுநர் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார் அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்