சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய வழித்தடம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை செல்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 15.46 கிலோமீட்டர் தூரம் இந்த மெட்ரோ பாதை உருவாக்கப்பட உள்ளது.