இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2025 ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயல்பட உள்ளது.
ஐபிஎல் 2025 போட்டிகளுக்கு மெட்ரோ சேவைகளை தடையின்றி வழங்க, மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிஎஸ்கே போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ சேவைகள் இரவு நேரத்தில் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் போட்டிக்கான சிறப்பு பயணச்சீட்டை வைத்திருப்பவர்கள், எந்தவொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்குள் இலவசமாக பயணிக்கலாம்.
போட்டிகள் நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவைக்கேற்ப, மெட்ரோ சேவைகள் அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாக கடைசி மெட்ரோ நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.