மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கட்சித் தலைமைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதிமுக, "மகன் திமுகவாக" மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், இதனை எதிர்த்து நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார். நீண்ட காலமாகவே மதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.