இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

Siva

செவ்வாய், 4 மார்ச் 2025 (16:18 IST)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர், திருமணமான ஐந்து நாட்களில் தனது மனைவியை அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீதரன், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர், இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிரியா என்பவரிடம் பழகினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
 
இதனால் ஸ்ரீதரன் ராணுவ விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர்களின் உதவியுடன் காதலியை திருமணம் செய்துகொண்டார். தேனிலவு முடிந்தபின் மனைவியுடன் வீட்டிற்கு வந்தபோது, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
குடும்பத்தினர் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஸ்ரீதரன் தனது மனைவியை அவரது அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இது தொடர்பாக பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் காவல்துறை விசாரணையில் ஸ்ரீதரன் தனது மனைவியுடன் வாழ முடியாது என கூறிவிட்டு மீண்டும் ராணுவத்திற்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்த இளம் பெண், ஐந்தே நாட்களில் தனியாய் நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்