அந்த நிலையில், திடீரென வாலிபரின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, குடும்பத்தினர் விருப்பத்திற்கு இணங்க, அந்த வாலிபர் தனது காதலியிடம், "இனிமேல் உன்னிடம் பழக மாட்டேன், திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று கூறிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, நைசாக பேசி, தன்னுடைய வீட்டிற்கு காதலனை வரவழைத்து டீ கொடுத்தார். டீ குடித்ததும் வாலிபர் மயங்கி விழுந்தார். அப்போது தான், அந்த டீயில் எலி மருந்து கலந்தது தெரியவந்தது.