அப்போது கோபம் அடைந்த கலைவாணி, அம்மிக்கல்லை எடுத்து, அன்பரசன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதன் காரணமாக, ரத்த வெள்ளத்தில் மிதந்த அன்பரசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார், கலைவாணியை கைது செய்து, அன்பரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர்களுடைய இரண்டு மகன்கள் ஆதரவின்றி இருப்பது, அந்த பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.