சென்னை மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதல்வர் திடீர் சோதனை!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (14:06 IST)
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தில் திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தி வருகிறார் என்பதும் அங்கு ஒழுங்கீனமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தை இன்று திடீரென அவர் ஆய்வு செய்தார். இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டபோது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடைய புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்