தமிழ் நிலக் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தைப்பூசம் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முருகனின் அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முருகன் கோவிலில் இன்னும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களும் தங்களது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!