கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு நாள்: பெற்றோர்கள் இன்று அஞ்சலி!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (09:41 IST)
கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளுக்கு இன்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்
 
கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதி பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்
 
அந்த வகையில் இன்றும் பலியான குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றியும் பெற்றோர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின் அனைவரும் பள்ளி குழந்தைகள் நினைவிடத்திற்கு சென்று சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்