விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக மூத்த தலைவர் ஜி.கே. மணி, “இன்று கட்சியில் ஏற்படும் சிக்கல்களுக்கு என்னை காரணமாகச் சொல்வது மிகவும் வேதனையளிக்கிறது. இதை கேட்டு மனம் உருகி நொந்து அழுந்தேன்,” என்றார்.
ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே விரைவில் நேரில் சந்திப்பு நடைபெற வேண்டும் என்பது கட்சி ஆதரவாளர்களின் கருத்தாகவும், தான் பொறுப்பாளர்கள் மாற்றத்தை எதிர்த்த போதிலும் அது அமல்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
"இப்போது உள்ளே சென்று பேசினால், ஏன் இதைப் பற்றிப் பேசினாய் என்று கேள்வி எழும்," என்று மனவருத்தத்துடன் கூறினார்.
கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அவதானித்த ஜி.கே. மணி, “இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று – குடும்பத்தோடு தலைமறைவாவேன், இல்லை எனில் உயிரையே கைவிடுவது” என அதிர்ச்சிகரமாக கருத்து தெரிவித்தார்.