அக்டோபர் 17 அன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில், விடுதி அறையில் தூங்கி கொண்டிருந்த ஐடி ஊழியர் ஒருவர், பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டார். பெண் எதிர்த்ததால், குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆரம்பத்தில் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதித்து, குற்றவாளியையும் அவரது வாகனத்தையும் அடையாளம் கண்டதாகத் துணை போலீஸ் கமிஷனர் ஃபராஷ் டி. ஐபிஎஸ் தெரிவித்தார். வேலைக்காக கேரளா வந்த லாரி ஓட்டுநர்தான் கைது செய்யப்பட்ட நபர்.
இந்த சம்பவத்தையடுத்து, கழக்கூட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் முறையான அனுமதியுடன் இயங்குவதை உறுதிசெய்யவும், போதிய பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.