கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை! – நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 30 மே 2022 (17:24 IST)
கோவிலை புனரமைப்பதாக பணம் திரட்டி மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கார்த்திக் கோபிநாத்திற்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலை புனரமைப்பதாக கூறி பக்தர்கள், பொதுமக்களிடம் பாஜக பிரமுகர் கார்த்திக் கோபிநாத் சுமார் ரூ.34 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க அம்பத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்