வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Siva
புதன், 22 மே 2024 (10:00 IST)
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று ஏற்கனவே இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

இந்த றைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிகவும் அரிதாகவே கோடை காலத்தில் அதுவும் மே மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றும் என்ற நிலையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்