காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என மத்திய அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசா மூலம் சென்னை மற்றும் வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக பயணிகள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. இவர்கள் தவிர, தொழில் தொடர்பாக மற்றும் திருமண உறவுகளுக்காக இந்தியா வந்துள்ளவர்களும் உள்ளனர். குறிப்பாக டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா பகுதிகளில் பாகிஸ்தானியர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, பாகிஸ்தானியர்கள் எங்கு எவ்வளவு பேர் தங்கியுள்ளார்கள் என்பதற்கான முழு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் காரணங்களைத் தவிர மற்ற நபர்களை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றா நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவ நோக்கில் தங்கி இருப்பவர்களை மனிதநேயம் கொண்ட பார்வையில் பார்க்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.