நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (20:40 IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க  மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில்               நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழகப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் - 19.02.2022 அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை எனப் பள்ளிக் கல்வி ஆணையர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். 50 சதவீதத்திற்கு மேல் தேர்தல் பணியில் இருந்தால் 18.02.2022 அன்று விடுப்பு வழங்கலாம் எனவும் மீதம் உள்ள பள்ளிகள் வழக்கம் போல செயல்படு என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்