இந்த நிலையில் இன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் சினர் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லாவில் நடந்து கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தோல்வி அடைந்தது” என்று கூறியுள்ளது.
மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.