சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!

வியாழன், 10 நவம்பர் 2022 (19:37 IST)
சென்னையின் முக்கிய இடங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்பத்தூர் அண்ணா நகர் வடபழனி வேளச்சேரி திருவல்லிக்கேணி கோடம்பாக்கம் தேனாம்பேட்டை ராயப்பேட்டை பட்டினபாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது
 
இதனால் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். ஏற்கனவே சென்னையில் நவம்பர் 11ம் 12 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்