அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை.. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா?

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (15:30 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால் ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்ன இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து நாளையும் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்