தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஹெச் ராஜா !

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (09:10 IST)
தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் தேதிகைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டு வந்த அவர் இப்போது நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி பேசிய ஹெச் ராஜா சிதம்பரத்தின் கதிதான் எதிர்க்கட்சி தலைவருக்கும் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். அவர் ஸ்டாலினைதான் சொல்லுகிறார் என்று திமுகவினரும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் நேற்று பேசிய அவர் ‘ப.சிதம்பரத்தைப் போன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார்.’ எனக் கூறி மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்