இந்த கோரிக்கையை ஒரு 'நாடகம்' என்று விமர்சித்த சக்கரவர்த்தி, "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்," என்று குற்றம் சாட்டினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சர்களுடன் முதலில் கச்சத்தீவுக்கு நேரில் செல்ல வேண்டும் என்று சவால் விடுத்தார். அப்படி சென்றால், 'உங்கள் தந்தையால் கொடுக்கப்பட்ட தீவை இப்போது நீங்கள் வந்து கேட்பது நியாயமா?' என்று இலங்கை மக்கள் கேட்பார்கள்.