ஜூலை முதல் டிசம்பர் வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (16:43 IST)
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களின் வசதிக்காக ஜூலை முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வோர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் வரும் ஜூலை முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
வேலூரில் இருந்து ஒரு சிறப்பு ரயிலும், விழுப்புரத்தில் இரண்டு சிறப்பு ரயில்களூம் திருவண்ணாமலைக்கு இயக்கவிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்