சென்னை தீவுத்திடலில் நாளை முதல் உணவுத்திருவிழா: திரைக்கலைஞர்கள் பங்கேற்பு!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (19:37 IST)
சென்னை தீவுத்திடலில் நாளை முதல் உணவு திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என்றும் இதில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும் என்றும் இந்த உணவுத் திருவிழாவில் திரைக்கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்