குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:53 IST)
குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி  நடக்கவுள்ள நிலையில், இதற்கான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இ ந்  நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளாட்சியிலும் மலரட்டும் என்ற தலைப்பிலான  பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில்,  தேர்தல் அறிக்கையின்படி, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்