தனுஷ் - செல்வராகவன் பட அப்டெட் கொடுத்த தயாரிப்பாளர்

திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:07 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகும் படங்களில் செலவ்ராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

க்மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய நால்வர் கூட்டணி புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இரண்டு கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து ஒரு சிறு இடைவேளை கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த இடைவேளையில் தனுஷ் தனது தெலுங்கு படமான வாத்தியில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் சமீபத்தில்  நானே வருவேன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சில சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில்,  நானே வருவேன் படம் குறித்த புதிய அப்டேட்டை இப்படத்தின் தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அசுரன், கர்ணன் வரிசையில் #NaaneVaruven நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்...

@dhanushkraja நடிப்பில் @selvaraghavan இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்..@thisisysr @omdop @dhilipactionTranslate Tweet எனத் தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷின் இருவேறு கெட்டப் கொண்ட போஸ்டரை படக்குழு வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

அசுரன், கர்ணன் வரிசையில் #NaaneVaruven நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்...@dhanushkraja நடிப்பில் @selvaraghavan இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்..@thisisysr @omdop @dhilipaction pic.twitter.com/RK75mncYb3

— Kalaippuli S Thanu (@theVcreations) February 14, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்